search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக தோல்வி"

    மத்திய அரசு மீதான அதிருப்தியே பாரதிய ஜனதாவின் தோல்விக்கு காரணம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். #Election2018 #BJP #Sarathkumar
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நடந்து முடிந்த தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

    இன்னும் சில மாதங்களில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

    2014-ம் ஆண்டு பா.ஜனதா மீது மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் சமீப காலமாக குறைந்து கொண்டே வருகின்றன என்பது கண்கூடு. அவசர கதியில் சரியான திட்டமிடல் இன்றி அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்றவற்றால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, வேலைவாய்ப்பு மற்றும் கருப்புப்பணம் குறித்த அறிவிப்புகளின் தோல்வி, ரஃபேல் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு, அனைத்திற்கும் மேலாக பாரம்பரியம் மிக்க நமது மதநல்லிணக்கத்திற்கு விடப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் என்பன போன்றவை பா.ஜனதா மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே பெருமளவு உண்மை.

    மத்திய அரசின் மீதான அதிருப்தியே இத்தேர்தலில் எதிரொலித்து, ஆட்சிப் பொறுப்பில் இருந்த பா.ஜனதாவின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது என்றே கருதலாம். இதன் மூலம் பாஜக, பாடம் கற்கவேண்டிய தருணம் இது என்பதை உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Election2018 #BJP #Sarathkumar
    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற தோல்வி குறித்து வசுந்தர ராஜே சிந்தியா கூறுகையில் மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #BJP #VasundharaRajeScindia
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை முதலே அங்கு காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது.

    இறுதியில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக தோல்வி அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தானில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வியை ஏற்று, முதல் மந்திரி பதவியை வசுந்தர ராஜே சிந்தியா ராஜினாமா செய்தார்.

    அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள். மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு அதிகளவில் பணிகளை மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தானில் அடுத்து ஆட்சியமைக்கும் கட்சியும் வளர்ச்சி பணிகளை தொடரும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #BJP #VasundharaRajeScindia
    எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தூரம் தாண்டுவதற்கு இரண்டு அடி பின்னால் செல்வதற்கு நிகரானது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh #BypollResults
    போபால்:

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மத்தியப்பிரதேசம் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அங்கு போலீசாருக்கான பயிற்சி மையம் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார்.



    அங்கு பாஜக ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசினார். அப்போது, இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு ராஜ்நாத் சிங் சமாளிப்பாக பதிலளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தொலைவை தாண்டுவதற்கு ஒருவர் இரண்டடி பின்னால் செல்வது போலாகும் என குறிப்பிட்டுள்ளார். #RajnathSingh #BypollResults
    ×